Friday, 8 May 2020

நரசிங்க முனையரையர்

தினம் ஒரு அடியார்:40

நரசிங்க முனையரையர்:

நடுநாடு என்று அழைக்கப்பட்ட திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட முனையரையர் எனும் குறுநில மன்னர் மரபில் தோன்றியவர் இவர்.முனையரையர்கள் ஆண்டதால் 'முனைப்பாடி நாடு’ என்னும் பெயர் அல்லது, முனைப்பாடி நாட்டை ஆண்டதால் முனையரையர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். சுந்தரரைத் தம் வளர்ப்புப்பிள்ளையாக எடுத்து வளர்த்து வந்தார்.
இவரது பூசைநாள்: புரட்டாசி சதயம்
மக்களை காத்து நிற்பதில் தலைசிறந்த அரசனாய் விளங்கிய இவர், தன் பெருஞ்செல்வமாய் திருநீற்றையே சிந்தையில் வைத்தவர். இவர் ஆளும் திருமுனைப்பாடி நாடு இயல்பாகவே அனைத்து வளங்களும் நிரம்பியது. ஈசனின் திருவடியார்களின் திருவடியை அடைவதே தன் பெறும் கடமையாய் கொண்டு வாழ்ந்தார். ஈசனின் கோவில்கள் அனைத்திலும் செல்வங்களை பெருகச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவ்வகையில் ஈசரின் ஆதிரை திருநாளில் திருக்கோவில்களை வந்தடையும் அடியார்களுக்கு பசும்பொன்காசுகள்நூறினை தனித்தனியே தந்து உணவும் உண்ணச் செய்வார். இவ்வாறான திருத்தொண்டில் ஈடுபடும்போது ஓர்ஆதிரைநாளில் திறுநீர்அணிந்த அடியார் உடலிலே காமம் மிகுதியால் தன்மானம் இகழப்படுமாறு நோய்குறினை உடையவராய் வந்து நின்றார். அவரின் உடற்குறையை கண்டு அனைவருரேர் இகழ்ந்து ஒதுங்கி நின்றனர் அதுகண்ட நரசிங்கர் அவரை அன்புடன் உபசரித்து மற்றவரைவிட அதிகமாய் மதித்து சிறப்பு செய்தார்.

தற்போது ஒழுக்கம் அறியா நெறியுடையவராய் இருப்பினும், திருநீறு பூசிய காரணம் ஒன்றினால் அவ்வடியாருக்கு இருமடங்கு அளவாய் பொன்னளித்து இனியமொழிகளை கூறி வழியனுப்பி வைத்தார். அவ்வகையில் தம் திருத்தொண்டின் நெறிதவறாமல் உண்மையான அன்பினால் சிறந்த சிவப்பழமாய் வாழ்ந்து வந்த நரசிங்க முனையரையர், திருநீற்றுத் தொண்டின் உயர்வால், ஈசனின் திருவடியை எய்து பிறவாநிலையை அடைந்தார்.

"மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் :ராஜம்

#தினம்ஒருஅடியார்
#நரசிங்கமுனையரையர்
#நாற்பதாம்நாள்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog