தினம் ஒரு அடியார்-33
சோமாசிமாற நாயனார்:
சோழநாட்டு திருவம்பரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: வைகாசி ஆயில்யம்
சுந்தரருக்கு நண்பராய் இவர் வருவதால் இவரது காலம் மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலமாய் கருதப்படுகிறது, அதாவது 9ம் நூற்றாண்டின் இடைப்பகுதி என உறுதியாய் கூறலாம். இவர் பிறந்த அம்பர் காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஓர் ஊர், திருவாரூர் மாவட்டத்தில் இவ்வூர் உள்ளது. மாமரங்கள் நிறைந்துள்ள சோலைகள் நிரம்ப உள்ள ஊரில்,வேதங்களை பயிலும் அந்தணர் குலத்தில் பிறந்தவர், சிவனடியாரை எதிரில் கண்டால் கையெடுத்து வணங்கி, அவருக்கு அமுதூட்டி வழியனுப்புவதை வாழ்நாள் கடனாய் கொண்டவர். சிவமந்திரத்தை நாள்தோறும் ஓதி,ஏழ் உலகங்களும் மகிழும்படி செய்து சிவனின் திருவடியை போற்றுவதே எனும் சிந்தையுடையவர், சிவனுக்கு அன்பர் எனில் அவர் எத்தகைய தன்மை உடையவராயினும், எந்த குலத்தைச் சேர்ந்தவராயினும் அவரே நம்மை ஆளாகவுடையவர் என்று கருதுவார். சைவநெறி தலைத்தோங்கசெய்த திருவாரூரைச் சேர்ந்து ஆரங்கள் விளங்கும் மார்பையுடைய வன்தொண்டரான சுந்தரரின் பெருநட்பினை பெற்றவர். அவருடைய திருவடிகளிலே சரணடைந்து, அவருடனே பயணித்து, அதனாலே சிவபதத்தைப் பெற்றார். முடிவில் குருவருளும், திருவருளும் பெற்று இறைவர் திருவடி நிழலை அடைந்தார்.
“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்”
#தினம்ஒருஅடியார்
#சோமாசிமாறநாயனார்
#முப்பத்துமூன்றாம்நாள்
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
சோமாசிமாற நாயனார்:
சோழநாட்டு திருவம்பரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: வைகாசி ஆயில்யம்
சுந்தரருக்கு நண்பராய் இவர் வருவதால் இவரது காலம் மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலமாய் கருதப்படுகிறது, அதாவது 9ம் நூற்றாண்டின் இடைப்பகுதி என உறுதியாய் கூறலாம். இவர் பிறந்த அம்பர் காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஓர் ஊர், திருவாரூர் மாவட்டத்தில் இவ்வூர் உள்ளது. மாமரங்கள் நிறைந்துள்ள சோலைகள் நிரம்ப உள்ள ஊரில்,வேதங்களை பயிலும் அந்தணர் குலத்தில் பிறந்தவர், சிவனடியாரை எதிரில் கண்டால் கையெடுத்து வணங்கி, அவருக்கு அமுதூட்டி வழியனுப்புவதை வாழ்நாள் கடனாய் கொண்டவர். சிவமந்திரத்தை நாள்தோறும் ஓதி,ஏழ் உலகங்களும் மகிழும்படி செய்து சிவனின் திருவடியை போற்றுவதே எனும் சிந்தையுடையவர், சிவனுக்கு அன்பர் எனில் அவர் எத்தகைய தன்மை உடையவராயினும், எந்த குலத்தைச் சேர்ந்தவராயினும் அவரே நம்மை ஆளாகவுடையவர் என்று கருதுவார். சைவநெறி தலைத்தோங்கசெய்த திருவாரூரைச் சேர்ந்து ஆரங்கள் விளங்கும் மார்பையுடைய வன்தொண்டரான சுந்தரரின் பெருநட்பினை பெற்றவர். அவருடைய திருவடிகளிலே சரணடைந்து, அவருடனே பயணித்து, அதனாலே சிவபதத்தைப் பெற்றார். முடிவில் குருவருளும், திருவருளும் பெற்று இறைவர் திருவடி நிழலை அடைந்தார்.
“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்”
#தினம்ஒருஅடியார்
#சோமாசிமாறநாயனார்
#முப்பத்துமூன்றாம்நாள்
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
No comments:
Post a Comment