Monday, 4 May 2020

அமர்நீதிநாயனார்

தினம் ஒரு அடியார்-06

அமர்நீதிநாயனார் :


சோழநாட்டின் பழம்பெருமை பெற்ற பழையாறை(இன்றைய பட்டீஸ்வரம், உடையாளூர் சுற்றியுள்ள பகுதிகள்)யில் பிறந்தவர். 7 ம் நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவர். இவர் திருநல்லூர் எனும் ஊரில் முக்தி பெற்றவர். இக்கோவில் கோச்செங்கனான் கட்டிய மாடக்கோவில்களுல் ஒன்று. இவரது பூசைநாள்: ஆனி பூரம் ஆகும்.

[மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா
எந் நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்
அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்-பெ.பு-503]

பொன்னும், பொருளும் இயல்பான செல்வமாய் வாய்க்கப்பெற்ற வணிகர் குடியில் தோன்றியவர் அமர்நீதியார். மிகுந்த செல்வம் கொண்டிருப்பினும், அவர்மனதில் நிலையாய் குடியிருப்பது எம்பெருமான் சிவன் மட்டுமே. அவரின் அடியாருக்கு அமுதுசெய்வித்து, வேண்டுவன கொடுப்பதாலேயே நிலையான செல்வம் பெற்று வாழ்ந்தார். திருநல்லூரில் நடக்கும் திருவிழாவில் அடியார்கள் உண்ணுவதற்கு திருமடம் ஒன்றினையும் அமைத்துக் கொடுத்தார். திருநல்லூர் ஈசர் தம்கோவனஆடையின் பெருமையை நாயனாருக்கு காட்டி, அருள்செய்யும் பொருட்டு, பிரம்மச்சாரி வேதியர் வேடம்பூண்டார்.

[கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்
தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளிப் படுப்பார் ஆய்த்
தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக-பெ.பு-510]

காணும் அனைவர் உள்ளம் உருக, அன்புநெறியை வெளிப்படுத்த தம்கைகளில் உள்ள தண்டில் இருகோவணமும், திருநீற்றுப்பையும், தருப்பைப்புல்லும் ஏந்தி அமர்நீதியாரின் திருமடத்தை அடைந்தார். அமர்நீதியார் அவரை எதிர்சேவைபுரிந்து வரவேற்றார்.
பின் நாயனாரிடம் வேதியர்,
"தெய்வத்தன்மையுடைய காவிரியில் நீராடி திரும்புகையில்,மழைபெய்தால் மாற்றிக்கொள்வதற்கு இந்தக்கோவணத்தை பாதுகாப்பாய் வைத்து பின் தருவீராக!" என்று கூறி தன் தண்டிலிருந்து வெண்ணிறகோவணத்தை அவிழ்த்து கொடுத்தார். அமர்நீதியாரும் பெற்றுக்கொண்டார். அதனை பத்திரமாய் வைத்தார். இறைவனோ தன் திருவிளையாடலால் அக்கோவணத்துணியை மறையச்செய்து, மழையையும் வரச்செய்து, நனைந்தும் வந்தார்.

பூனூல் அணிந்தமார்புடைய இறைவர், நாயனாரை சோதிக்க எண்ணி, தன் கோவணஆடையை எடுத்துவர சொன்னார். அமர்நீதியும் உத்தரவையேற்று மடத்தினுள் சென்றில், அங்கே ஆடை இல்லாமல் அதிர்ந்தார். அவ்விடத்திலேயே இறைவனின் மாயையில் அகப்பட்டார். வேறுவழியில்லாமல் வேறு ஒரு கோவணஆடையை கொண்டுவந்து கொடுத்தார். உண்மையை கூறி தன் தவறை பொருத்தருளுமாறு வேண்டினார்.

[நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா-பெ.பு-526]

அமர்நீதியாரே! நீர்சொல்வது நன்றாயிருக்கது, கோவணம் கொடுத்து அதிகநாளும் இல்லை, அவ்வாறிருக்க அதனை கவர்ந்துகொண்டு வேறொன்றை தருவதா? என்றார். இது உமக்கு அழகானதா? என வெகுண்டெழுந்தார் ஈசர்.

மிகவும் மனம்வருந்தினார் அமர்நீதியார், அத்துடன் இத்தவறுக்கு மன்னிப்பும் கேட்டு, இவ்வாடைக்கு மாற்றாய், எச்செயலை ச.சொன்னாலும் செய்கிறேன், விலையுயர்ந்த பட்டாடை, மணிகள் கேட்பினும் தருகிறேன் என வேதியர் பாதம் பணிந்தார். இறைவனும் பிடிவாதமாய், பொன்னும் மணியும் என் கோவணஆடைக்கு ஈடாகுமோ?  என் கோவணத்திற்கு நிகரான கோவணஆடையை தருவதே முறை என்றார். மேலும் தண்டிலிருந்த மற்றொரு கோவணஆடையை அவிழ்த்து இதற்கு சமமான ஆடையை தருவீராக என்று கூறினார்.

[நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணத் தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்-பெ.பு-533]

அமர்நீதியார் நன்று என கூறி ஒரு தராசினை அங்கு நட்டார்.மேருமலையையே வில்லாய்கொண்ட ஈசன் தன் கோவணஆடையை ஒருதட்டில் வைத்தார். அதற்கு ஈடாய் அமர்நீதியாரும் தன்கையிலிருந்த கோவணஆடையைஅங்கு வைக்க, அது நிகரில்லாததை கண்டார். மடத்திலிருந்த இன்னபிற கோவணத்தையெல்லாம் வைக்க அப்போதும் வேதியரின் ஒற்றைகோவண ஆடைக்கு நிகரில்லாமல் இருந்தது.

[முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடு தாழ்வு உறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்
தட்டு மேற் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு-பெ.பு-536]

அதிர்ந்துபோன அமர்நீதியார் விலையுயர்ந்த பட்டாடை வைத்தும் பயனில்லை. பலகோடி பெருமானாம் உள்ள பொருளை வைத்தும் ஈடில்லை. வேதியரிடம் வேண்டினார், ஐயனே எம் செல்வங்களனைத்தும் இத்தட்டில் வைக்க அனுமதியுங்கள் என்றார். உமைக்கு இடப்புறம்அளித்த ஈசனார், யாம் கூறுவதற்கு இதிலென்ன உள்ளது. யாம் வேண்டுவது எம் கோவணஆடைக்கு மாற்று மட்டுமே, அதற்கு நீவிர் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார். உடனே, அமர்நீதியார் விலையுயர்ந்த மணிகள், பொன் அனைத்தையும் மறுதட்டில் வாரியிறைத்தார் அப்போதும் அச்செல்வங்கள் யாவும் ஒற்றைக்கோவண ஆடைமுன் ஈடில்லாது தாழ்ந்தது. மேலும் வேதியரிடம், என்செல்வங்கள் அனைத்தும் இத்தட்டில் வைத்தும் நிகரில்லை, என்மனைவி, மகனுடன் நான் இத்தட்டில் ஏற அனுமதியுங்கள் என்று வேண்டினார். வேதியரும் உடன்பட்டார்.

[இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்-பெ.பு-544]

"இறைவனின் திருநீற்றிலே அன்புகொண்ட அடிமைத் திறத்திலே நாங்கள் இதுவரை தவறாமை உண்மையானால் இத்தராசு நேர்நிற்பதாக" என்று திருநல்லூர் இறைவனை துதித்து ஏறினார் தன் வீட்டாருடன். உடனே அவ்வதிசயம் நிகழ்ந்தது. தராசின் இருத்தட்டும் சமநிலையடைந்தது. அறிவிற்சிறந்த அமர்நீதியாரின் பெருமைம்மை அனைவரும் துதித்தனர். தேவர்கள் வாணிலிருந்து கற்பகமலரை தூவினர்.

[அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப்
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார்-பெ.பு-547]

 அப்பூமலையில் ஒருபக்கம் உமையும், மறுபக்கமும்தானுமாய், மாதொருபாகனாய் ஈசன் காட்சியளித்தார். அமர்நீதியின் குடும்பத்தார் அனைவருக்கும் அழிவற்ற சிவபதம் அளித்து இறைவன் மறைந்தார்.

[நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்-பெ.பு-549]

ஈசனின் அருளாலே துலாபாரமே விமானமாகி அமர்நீதியாரின் குடும்பத்தை அழைத்து மேலே சொர்க்கலோகம் சென்றது.

"அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்"

சிற்பம்:தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#அமர்நீதிநாயனார்
#ஆறாம்நாள்தினம் ஒரு அடியார்-06

அமர்நீதிநாயனார் :

சோழநாட்டின் பழம்பெருமை பெற்ற பழையாறை(இன்றைய பட்டீஸ்வரம், உடையாளூர் சுற்றியுள்ள பகுதிகள்)யில் பிறந்தவர். 7 ம் நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவர். இவர் திருநல்லூர் எனும் ஊரில் முக்தி பெற்றவர். இக்கோவில் கோச்செங்கனான் கட்டிய மாடக்கோவில்களுல் ஒன்று. இவரது பூசைநாள்: ஆனி பூரம் ஆகும்.

[மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா
எந் நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்
அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்-பெ.பு-503]

பொன்னும், பொருளும் இயல்பான செல்வமாய் வாய்க்கப்பெற்ற வணிகர் குடியில் தோன்றியவர் அமர்நீதியார். மிகுந்த செல்வம் கொண்டிருப்பினும், அவர்மனதில் நிலையாய் குடியிருப்பது எம்பெருமான் சிவன் மட்டுமே. அவரின் அடியாருக்கு அமுதுசெய்வித்து, வேண்டுவன கொடுப்பதாலேயே நிலையான செல்வம் பெற்று வாழ்ந்தார். திருநல்லூரில் நடக்கும் திருவிழாவில் அடியார்கள் உண்ணுவதற்கு திருமடம் ஒன்றினையும் அமைத்துக் கொடுத்தார். திருநல்லூர் ஈசர் தம்கோவனஆடையின் பெருமையை நாயனாருக்கு காட்டி, அருள்செய்யும் பொருட்டு, பிரம்மச்சாரி வேதியர் வேடம்பூண்டார்.

[கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்
தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளிப் படுப்பார் ஆய்த்
தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக-பெ.பு-510]

காணும் அனைவர் உள்ளம் உருக, அன்புநெறியை வெளிப்படுத்த தம்கைகளில் உள்ள தண்டில் இருகோவணமும், திருநீற்றுப்பையும், தருப்பைப்புல்லும் ஏந்தி அமர்நீதியாரின் திருமடத்தை அடைந்தார். அமர்நீதியார் அவரை எதிர்சேவைபுரிந்து வரவேற்றார்.
பின் நாயனாரிடம் வேதியர்,
"தெய்வத்தன்மையுடைய காவிரியில் நீராடி திரும்புகையில்,மழைபெய்தால் மாற்றிக்கொள்வதற்கு இந்தக்கோவணத்தை பாதுகாப்பாய் வைத்து பின் தருவீராக!" என்று கூறி தன் தண்டிலிருந்து வெண்ணிறகோவணத்தை அவிழ்த்து கொடுத்தார். அமர்நீதியாரும் பெற்றுக்கொண்டார். அதனை பத்திரமாய் வைத்தார். இறைவனோ தன் திருவிளையாடலால் அக்கோவணத்துணியை மறையச்செய்து, மழையையும் வரச்செய்து, நனைந்தும் வந்தார்.

பூனூல் அணிந்தமார்புடைய இறைவர், நாயனாரை சோதிக்க எண்ணி, தன் கோவணஆடையை எடுத்துவர சொன்னார். அமர்நீதியும் உத்தரவையேற்று மடத்தினுள் சென்றில், அங்கே ஆடை இல்லாமல் அதிர்ந்தார். அவ்விடத்திலேயே இறைவனின் மாயையில் அகப்பட்டார். வேறுவழியில்லாமல் வேறு ஒரு கோவணஆடையை கொண்டுவந்து கொடுத்தார். உண்மையை கூறி தன் தவறை பொருத்தருளுமாறு வேண்டினார்.

[நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா-பெ.பு-526]

அமர்நீதியாரே! நீர்சொல்வது நன்றாயிருக்கது, கோவணம் கொடுத்து அதிகநாளும் இல்லை, அவ்வாறிருக்க அதனை கவர்ந்துகொண்டு வேறொன்றை தருவதா? என்றார். இது உமக்கு அழகானதா? என வெகுண்டெழுந்தார் ஈசர்.

மிகவும் மனம்வருந்தினார் அமர்நீதியார், அத்துடன் இத்தவறுக்கு மன்னிப்பும் கேட்டு, இவ்வாடைக்கு மாற்றாய், எச்செயலை ச.சொன்னாலும் செய்கிறேன், விலையுயர்ந்த பட்டாடை, மணிகள் கேட்பினும் தருகிறேன் என வேதியர் பாதம் பணிந்தார். இறைவனும் பிடிவாதமாய், பொன்னும் மணியும் என் கோவணஆடைக்கு ஈடாகுமோ? என் கோவணத்திற்கு நிகரான கோவணஆடையை தருவதே முறை என்றார். மேலும் தண்டிலிருந்த மற்றொரு கோவணஆடையை அவிழ்த்து இதற்கு சமமான ஆடையை தருவீராக என்று கூறினார்.

[நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணத் தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்-பெ.பு-533]

அமர்நீதியார் நன்று என கூறி ஒரு தராசினை அங்கு நட்டார்.மேருமலையையே வில்லாய்கொண்ட ஈசன் தன் கோவணஆடையை ஒருதட்டில் வைத்தார். அதற்கு ஈடாய் அமர்நீதியாரும் தன்கையிலிருந்த கோவணஆடையைஅங்கு வைக்க, அது நிகரில்லாததை கண்டார். மடத்திலிருந்த இன்னபிற கோவணத்தையெல்லாம் வைக்க அப்போதும் வேதியரின் ஒற்றைகோவண ஆடைக்கு நிகரில்லாமல் இருந்தது.

[முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடு தாழ்வு உறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்
தட்டு மேற் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு-பெ.பு-536]

அதிர்ந்துபோன அமர்நீதியார் விலையுயர்ந்த பட்டாடை வைத்தும் பயனில்லை. பலகோடி பெருமானாம் உள்ள பொருளை வைத்தும் ஈடில்லை. வேதியரிடம் வேண்டினார், ஐயனே எம் செல்வங்களனைத்தும் இத்தட்டில் வைக்க அனுமதியுங்கள் என்றார். உமைக்கு இடப்புறம்அளித்த ஈசனார், யாம் கூறுவதற்கு இதிலென்ன உள்ளது. யாம் வேண்டுவது எம் கோவணஆடைக்கு மாற்று மட்டுமே, அதற்கு நீவிர் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார். உடனே, அமர்நீதியார் விலையுயர்ந்த மணிகள், பொன் அனைத்தையும் மறுதட்டில் வாரியிறைத்தார் அப்போதும் அச்செல்வங்கள் யாவும் ஒற்றைக்கோவண ஆடைமுன் ஈடில்லாது தாழ்ந்தது. மேலும் வேதியரிடம், என்செல்வங்கள் அனைத்தும் இத்தட்டில் வைத்தும் நிகரில்லை, என்மனைவி, மகனுடன் நான் இத்தட்டில் ஏற அனுமதியுங்கள் என்று வேண்டினார். வேதியரும் உடன்பட்டார்.

[இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்-பெ.பு-544]

"இறைவனின் திருநீற்றிலே அன்புகொண்ட அடிமைத் திறத்திலே நாங்கள் இதுவரை தவறாமை உண்மையானால் இத்தராசு நேர்நிற்பதாக" என்று திருநல்லூர் இறைவனை துதித்து ஏறினார் தன் வீட்டாருடன். உடனே அவ்வதிசயம் நிகழ்ந்தது. தராசின் இருத்தட்டும் சமநிலையடைந்தது. அறிவிற்சிறந்த அமர்நீதியாரின் பெருமைம்மை அனைவரும் துதித்தனர். தேவர்கள் வாணிலிருந்து கற்பகமலரை தூவினர்.

[அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப்
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார்-பெ.பு-547]

 அப்பூமலையில் ஒருபக்கம் உமையும், மறுபக்கமும்தானுமாய், மாதொருபாகனாய் ஈசன் காட்சியளித்தார். அமர்நீதியின் குடும்பத்தார் அனைவருக்கும் அழிவற்ற சிவபதம் அளித்து இறைவன் மறைந்தார்.

[நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்-பெ.பு-549]

ஈசனின் அருளாலே துலாபாரமே விமானமாகி அமர்நீதியாரின் குடும்பத்தை அழைத்து மேலே சொர்க்கலோகம் சென்றது.

"அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்"

சிற்பம்:தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#அமர்நீதிநாயனார்
#ஆறாம்நாள்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog