Saturday, 30 May 2020

இசைஞானி அம்மையார்

தினம் ஒரு அடியார்-62

இசைஞானி அம்மையார் புராணம் :

சோழவளநாட்டின் திருவாருர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் கமலாபுரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் ஆதிசைவர் மரபில் பிறந்து சடைய நாயனாரை மணந்தார். 
இவரது பூசைநாள் : சித்திரை-சித்திரை

[ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் 
 அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்  
 இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் 
 மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்]

முடிவில்லாத பெருமைமிக்க சடையனாரை மணந்து, எவ்வகையானும் அழிக்க முடியாத மூன்று கோட்டைகளை சினந்து அழித்த சிவபெருமான் ஆட்கொண்டருளிய நம்பியாரூரன் எனும் சுந்தரரை பெற்றெடுத்த சிறப்பினையுடையவர் இசைஞானியர் ஆவார். இதனாலேயே இவர் அடியாராய் வைத்து போற்றக்கூடிய நிலையில் சேக்கிழார் போற்றுகிறார்.

"இசைஞானி காதலன் திருநாவலூர்கோன் அன்னவனாம் 
ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக்கன்பராவரே"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம்: Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#அறுபத்துஇரண்டாம்நாள்
#இசைஞானிஅம்மையார்நாயனார்


No comments:

Post a Comment

Popular Posts In This Blog