தினம் ஒரு அடியார்-61
சடைய நாயனார்:
இவ்வுலகில் நிறைய ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.எல்லாமே இறைவனைப் பற்றித்தான் பேசுகின்றன.
தாதமார்க்கம்(தாச மார்க்கம்), சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்,
சன்மார்க்கம் என்பன சிவபிரானை அடையும் நன்மார்க்கங்கள்
ஆகும். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற
பெயராலும் வழங்கப் பெறுதல் உண்டு.
இம்மார்க்கங்களில் சகமார்க்கத்தினை சுந்தர் பெருமானார் பின்பற்றினார். இந்நெறி யோகமார்க்கம் எனவும் கூறப்பெறும்.யோகம் என்பதற்குப் பொருள் ஒன்றுதல் என்பதாகும்.
அதாவது உயிரானது இறைவனோடு ஒன்றியிருப்பதே யோகநிலை.
இறைவனோடு ஒன்றிவிடுகின்ற காரணத்தால் இறைவனுக்குத்
தோழமையாகின்ற அருள் கிடைக்கின்றது. எனவேதான்
இந்நெறி தோழமை நெறி எனப்படுகிறது. இந்நெறியை "உயிராவணம்"
என்று தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலும், "தேடுவேன்
தேடுவேன்"என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடலும் குறிப்பிடுகின்றன.
இத்தகைய சிறப்புமிக்க சகமார்த்தை கடைபிடித்து ஒழுகிய பார்புகழும் சுந்தரமூர்த்தி நாயனாரை நமக்கு அளித்தவர் சடையநாயனார் ஆவார்.
இவரது பூசைநாள்: மார்கழி திருவாதிரை
இவர் ஆதிசைவகுலத்தில் தோன்றியவராவார்.
[தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர்
கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும்
எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம்
நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ]
தம்முடைய தலைவராகிய சிவபெருமானையே தமக்கு தோழராய் கொண்டருளி பின் அவரையே தம் பரவையாரிடத்தூ தூதாக செல்லும்படி ஏவல் கொண்டருளியவரும், சேரமான் பெருமாளின் உற்ற நண்பருமாகிய நம்பியாரூரரை உலக உயிர்கள் உய்யும்பொருட்டு அளித்ததால் சடையரை நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் நிலையை அடைந்தார்.
"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்"
சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#சடையநாயனார்
#அறுபத்துஒன்றாம்நாள்
No comments:
Post a Comment